ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
எதிர்காலப் பயன்பாடு

அன்புடையீர், வணக்கம்.

சிங்கப்பூரின் 50ஆவது பிறந்தநாளுக்கு இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக உருவாகி வரும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் பற்றிய நான்காவது மின்னஞ்சல் இது.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் எவ்வாறு பயனடையப் போகிறார்கள் என்பதை இந்த மின்னஞ்சலில் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இலக்கிய மின்தொகுப்புப் பயன்பாட்டிற்கான சோதனைத் திட்டத்தில் (Trialing) மொத்தம் 3 தொடக்கப்பள்ளிகளும், 6 உயர்நிலைப்பள்ளிகளும், 2 தொடக்கக்கல்லூரிகளும், 1 கல்வி நிலையமும் ஈடுபட்டன.

மின்தொகுப்பு அறிமுகமானதும் அனைத்து நிலைகளிலும் பயிலும் தமிழ் மாணவர்களும், கற்பிக்கும் தமிழாசிரியர்களும் பல நன்மைகளைப் பெறவிருக்கின்றனர்.

இந்தத் தொகுப்புமூலம் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்களைப் படிப்பதற்கும் ரசிப்பதற்குமான வாய்ப்பு ஏற்படுகிறது. சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வகுப்பறைகளில் பாடக் கருப்பொருளோடு தொடர்புடைய இலக்கியப் படைப்புகளை ஒப்பிட்டு ஆராய்வதற்கும் மின்தொகுப்பு வாய்ப்பளிக்கும். மேலும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள்வழித் தமிழர் மரபு, பண்பாடு, விழுமியங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் புரியவைக்கலாம்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்களின்வழி 21ஆம் நூற்றாண்டுத் திறன்களை வளர்க்க முடியும். சமூக முரண்களையும் சிக்கல்களையும் ஆராயும் இலக்கியப் படைப்புகள் குறித்து விவாதிக்க முடியும்.

குறிப்பிட்ட உள்ளூர் எழுத்தாளரின் படைப்புகளைப் படித்து அவருடன் சந்திப்பு நடத்துவதற்கும் மின்தொகுப்பு வழிவகுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் குறித்து இணையத் தளத்திலேயே மாணவர்கள் கருத்துரையாடல் செய்யலாம் அல்லது வகுப்பறையிலேயே வாசகர் வட்டத்தை (Readers’ Circle) உருவாக்கி இலக்கியக் கலந்துரையாடல்களை நடத்தலாம்.

இவற்றைத் தவிர்த்து, இலக்கிய மின்தொகுப்பில் உள்ள படைப்புகளைக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கலாம்.

தமிழாசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டகம் (Professional Development of Tamil Language Teachers) இலக்கிய மின்தொகுப்பில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்திப் பயிலரங்குகளை நடத்தலாம்.

 தற்போது தேசிய நிலையில் மாணவர்களுக்கான பல போட்டிகள் தமிழ்மொழி சார்ந்தவையாக உள்ளன. இனி, எளிய இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்த இலக்கிய மின்தொகுப்பைப் பயன்படுத்தலாம். 

இத்தகைய பலன்களை வழங்கவிருக்கும் மின்மரபுடைமைத் திட்டத்தின் தொடக்கவிழா இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா குறித்த மேல்விவரங்கள் அடுத்த வார மின்னஞ்சலில் இடம்பெறும்.

அன்புடன்,
தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys