ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
சமூகத்தின் அன்பளிப்பு

 

அன்புடையீர், வணக்கம்.

சிங்கப்பூரின் 50ஆவது பிறந்தநாளுக்கு இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக உருவாகி வருகிறது தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்.

நாம் சுதந்திரம் பெற்ற 1965ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, ஐம்பது ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களை மின்மயமாக்கி, அவற்றை யாரும் என்றும் எங்கிருந்தும் நினைத்த மாத்திரத்தில் படித்துப் பயன்பெறுவதைச் சாத்தியமாக்கப் போகிறது இந்தத் திட்டம். வருங்காலத் தலைமுறையினருக்கும் தொடர்ந்து பயன்தரப் போகிறது இத்திட்டம்.

இந்தத் தொலைநோக்குத் திட்டம் உருவானதற்கு அடிப்படைக் காரணம், சிங்கப்பூரில் பதிப்பிக்கப்படும் தமிழ் நூல்களுக்குப் போதிய சந்தை இல்லாததும், அவை புத்தகக் கடைகளில் போதிய அளவு கிடைக்காததும்தான். இதனால், சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வரலாறு எதிர்காலத்தில் சுவடு தெரியாமல் அழிந்து போகக்கூடிய அபாயம் உண்டு.

தமிழ்நாட்டின் தொன்மையான இலக்கியங்களில் பல இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனதற்கு மின்னிலக்கத் தொழில்நுட்பம் இல்லாமல்போனதுதான் மிகப் பெரிய காரணம். இப்போது அந்தத் தொழில்நுட்பம் நமது கைகளில் உள்ளது. அதனைப் பயன்படுத்தி நமது நிகழ்கால இலக்கியத்தை நிரந்தப்படுத்துவது அறிவுபூர்வமானது மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

அந்தப் பணியில்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது தமிழ் மின்மரபுடைமைத் திட்டப் பணிக் குழு. அந்தக் குழுவில் 15 உறுப்பினர்களும் சுமார் 250 தொண்டூழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கும் அதனைப் போற்றிப் பாதுகாப்பதற்கும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தனிப்பட்ட ஒருசிலரின் முயற்சியின் பயனே இத்திட்டம். எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்திராமல் குடிமக்களும் தங்கள் பங்கை ஆற்றுவதற்கான ஒரு சிறந்த உதாரணம்தான் இந்தத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அதே நேரத்தில், சரியான திட்டமாயின், அது எவரிடமிருந்து வரினும், அதனை ஏற்றுத் தேவையான உதவிகளைத் தர அரசு தயங்காது என்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டு இந்தத் திட்டம். தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசியக் கலைகள் மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்ச்சி மன்றம் ஆகிய அரசு சார்ந்த அமைப்புகள் இந்த முன்னோடித் திட்டத்தை வரவேற்று முழு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. பிரதமர் அலுவலகத்தைச் சார்ந்த அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இத்திட்டத்திற்குப் புரவலராக இருந்து வழிநடத்துகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் எழுத்தாளர்களும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இத்திட்டத்திற்கு ஆரம்பக் கட்டத்திலிருந்தே உறுதுணையாக நின்றுவந்துள்ளனர். அதே போன்று 250 தமிழாசிரியர்கள் தோளோடு தோள் கொடுத்து இத்திட்டம் இனிதே நிறைவேறப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பணி நிறைவடையும் தறுவாயில் உள்ளது. மின்மரபுடைமைத் திட்டத்தின் தொடக்கவிழா அடுத்த மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த மின்மடல்களில் திட்டம் பற்றியும் விழாபற்றிய மேல்விவரங்களையும் அறியலாம்.

 

அன்புடன்,
தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys