ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
நூல்களுக்கான குறிப்புரை

அன்புடையீர், வணக்கம்.

சிங்கப்பூரின் 50ஆவது பிறந்தநாளுக்கு இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக உருவாகி வரும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் பற்றிய அறிமுக மின்னஞ்சல் கடந்த வாரம் தங்களுக்குக் கிடைத்திருக்கும்.

இந்தத் திட்டத்தில் பல்வேறு பணிகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பணியும் முக்கியமானது. அந்தப் பணிகள் நிறைவாகச் செய்யப்பட்டால்தான் வகுத்துக்கொண்ட குறிக்கோள்கள் சிறப்பாக நிறைவுபெறும்.

நூல்களுக்குக் குறிப்புரை எழுதுவது முக்கியமான பணிகளுள் ஒன்று. அது ஆங்கிலத்தில் annotation என்று அழைக்கப்படுகிறது. குறிப்புரை என்பது நூலின் சுருக்கத்தை ஒருசில வரிகளில் விளக்குவதாகும்.

ஒரு நூலைத் தேடுவதற்குப் பொதுவாக நூலாசிரியரின் பெயர், அல்லது நூலின் தலைப்பு இருந்தால் போதும். ஆனால், ஒரு குறிப்பிட்ட துறை அல்லது கருத்துக் குறித்த நூல்களைத் தேடுவதென்றால் எப்படி? அதற்கு உதவுவதுதான் குறிப்புரை.

மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள் போன்றோருக்குக் குறிப்புரைகள் பேருதவியாக இருக்கும்.

குறிப்புரை எழுதும் பணி ஆறு மாதங்களில் முற்றுப்பெற்றது. சுமார் 70 ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் தொண்டூழியர்களாகச் செயற்பட்டனர்.

குறிப்புரை எழுதுவதால் ஏற்படக்கூடிய பயன்கள்:

  • குறிப்பிட்ட படைப்பு அல்லது படைப்பாளர் பற்றிய விவரங்களை அறிய உதவுதல்
  • இலக்கிய ஆய்வாளர்களுக்குப் பெரும் பயனாக இருத்தல்
  • மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்கூடப் பயன்படுதல்
  • இலக்கியத்தை ஆவணப்படுத்த முடிதல்
  • அடுத்த தலைமுறையினருக்குக் கொடையாக வழங்க முடிதல்
  • தற்போதைய / எதிர்கால எழுத்தாளர்கள் தகவல் தொழில்நுட்பம் வழங்கும் வசதிகளைக் கருத்திற்கொண்டு செயற்படுதல்

மொத்தம் சுமார் 450 நூல்களுக்குக் குறிப்புரை எழுதப்பட்டது. இவற்றுள், 350 நூல்கள் மின்மரபுடமைத் திட்டத்தில் உள்ளவை. எஞ்சியவை வேறு தொகுப்பில் உள்ளவை. தேசிய நூலகத்தில் இவ்வளவு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை. குறிப்புரை எழுதிய தொண்டூழியர்களுக்குத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு நன்றி கூறுகிறது.

மின்மரபுடைமைத் திட்டத்தின் தொடக்கவிழா அடுத்த மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த மின்னஞ்சல்கள்வழித் திட்டத்தின் மற்ற அம்சங்கள் பற்றியும் விழா குறித்த மேல்விவரங்கள் பற்றியும் அறியலாம்.

அன்புடன்,
தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys