ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
மெய்ப்புப் பார்த்தல்

அன்புடையீர், வணக்கம்.

சிங்கப்பூரின் 50ஆவது பிறந்தநாளுக்கு இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக உருவாகி வரும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் பற்றிய அறிமுக மின்னஞ்சல்கள் கடந்த இரு வாரங்களில் தங்களுக்குக் கிடைத்திருக்கும்.

இந்தத் திட்டத்தில் பல்வேறு பணிகள் அடங்கியுள்ளன. குறிப்புரை எழுதும் பணி பற்றி கடந்த மின்னஞ்சலில் விளக்கியிருந்தோம். இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான பணி மெய்ப்புப் பார்த்தல் (proof reading).

நூல்கள் மின்மயமாக்கப்பட்ட பிறகு அவை மூல நூல்களில் உள்ளது போலவே இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதே மெய்ப்புப் பார்க்கும் பணி. இது பிழை திருத்தும் பணி அல்ல. மூல நூலில் ஒரு பிழை இருக்குமேயானால், மின்மயமாக்கப்பட்ட நூலிலும் அப்பிழை இருக்கவேண்டும். அதுதான் மெய்ப்புப் பார்க்கும் பணி. இந்தப் பணியைச் செய்வதற்கு முழு நூல்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதுவே அதிக நேரம் எடுத்துக்கொண்ட பணியாகும்.

மெய்ப்புப் பார்க்கும் பணியைச் செய்த அனைவரும் தொண்டூழியர்களே. ஒரு ஒருங்கிணைப்பாளரும் 15 குழுத் தலைவர்களும் சுமார் 150 உறுப்பினர்களுடன் இப்பணியைச் செய்தனர். ஒவ்வொரு குழுத் தலைவரும் சுமார் 10 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டனர்.

சரிபார்த்தல் என்பது ஆசிரியர் கண்களுக்கு மிகவும் பரிட்சயம் என்பதால், இந்தப் பணிக்கு முன்வந்த பெரும்பான்மையினர் ஆசிரியர்களாகவே இருந்தனர். சுமார்10 உறுப்பினர்கள் மட்டுமே வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். இவ்வாண்டு மார்ச் மாதம் மெய்ப்புப் பார்க்கும் பணி தொடங்கி ஜூலை மாதம் முடிவடைந்தது.

தொண்டூழியர்கள், ஒவ்வொரு நூலையும் சரிபார்க்க, இரண்டு வாரம் முதல் ஒரு மாத காலம்வரை எடுத்துக்கொண்டனர். உறுப்பினர்கள் முடித்து அனுப்புவதை, குழுத் தலைவர்கள் மீண்டும் சரிபார்ப்பர். இறுதியாக, ஒருங்கிணைப்பாளர் சரிபார்த்த பிறகே தேசிய நூலக வாரியத்தின் பிரதிநிதிக்கு அவை அனுப்பப்பட்டன.

பணி சிரமமாக இருந்தாலும் சிங்கப்பூர்ப் படைப்பாளர்களின் அருமையான படைப்புகளைப் படித்து இரசிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்பதே பெரும்பாலான தொண்டூழியர்களின் கருத்து.

மெய்ப்புப் பார்க்கும் பணியைச் செவ்வனே செய்துமுடித்த தொண்டூழியர்களுக்குத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

மின்மரபுடைமைத் திட்டத்தின் தொடக்கவிழா இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அடுத்தடுத்த மின்னஞ்சல்கள்வழித் திட்டத்தின் மற்ற அம்சங்கள் பற்றியும் விழா குறித்த மேல்விவரங்கள் பற்றியும் அறியலாம்.

அன்புடன்,
தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys