ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
தொழில்நுட்பத்தின் பங்கு

அன்புடை​யீர், வணக்கம்.

சிங்கப்பூரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் உருவாக்கி வரும் தமிழ் மின்வளத்தொகுப்பினை இந்திய ச​மூகத்தின் அன்பளிப்பாக நாட்டுக்கு அர்ப்பணிக்கும் தினம் நெருங்கிவிட்டது.

இந்தத் திட்டத்தைச் சாத்தியமாக்கியிருப்பது தகவல் தொழில்நுட்பம்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, எந்தத் தொழில்நுட்பம் இத்திட்டத்திற்கு முதுகெலும்பாக விளங்கியது என்பதை இந்த மின்னஞ்சலில் விளக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

ஏற்கெனவே புத்தக வடிவத்தில் வந்துள்ள எழுத்துக்களை மின்மயமாக்குவதற்கு Optical Character Recognition எனப்படும் ஒளிவழி எழுத்து அறிதல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமைபெறாத, இன்னும் முன்னேற்றங்களைக் கண்டு​வரும் ஓர் உன்னதத் தொ​ழில்நுட்பம் அது.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தில் உள்ள சுமார் 350 தமிழ் நூல்களும் முதலில் ஒளியச்சு​ (scan) செய்யப்பட்டன. அந்த ஒளியச்சுப் பிரதிகள் பின்னர் ஒளிவழி எழுத்து அறியும் முறைக்கு ​உட்படுத்தப்பட்டன.

இத்தகைய பெரிய அளவில் தமிழ் நூல்கள் ஒளிவழி எழுத்து அறிதல் தொழில்நுட்பத்துக்கு ​உட்படுத்தப்படுவது இதுவே முதல் முயற்சியாகும். தேசிய ​நூலக வாரியம் தமிழ் நூல்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் இதுவே மு​தல் முறை.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, ஒளிவழி எழுத்து அறிதல் தொழில்நுட்பம்  இன்னும் முழுமை பெறாத காரணத்தால் மின்னிலக்கமாக்கப்பட்ட நூல்களில் அனைத்துச் சொற்களையும் சரியாகப் பதிவு செய்வது இன்னும் சவால்மிக்க ஒன்றாகவே உள்ளது.

தொழில்நுட்பத்தின் அந்தக் குறைபாட்டைக் களைய, மின்னிலக்கமாக்கப்பட்ட அத்தனை புத்தகங்களும் proof reading எனப்படும் மெய்ப்புப் பார்க்கும் பணிக்கு உட்படுத்தப்பட்டன. அந்தப் பணியைத் தேசிய நூலக வாரியத்தின் சில அதிகாரிகளும் சுமார் 150தமிழாசியர்களும் தங்கள் ​பொன்னான​ நேரத்தை ஒதுக்கிச் செய்து முடித்திருக்கிறார்கள். 
 
இந்த அரிய முயற்சியால் நூலின் தலைப்பு, நூலாசிரியர், நூலின்வகை, பதிப்பாளர், பதிப்பிக்கப்பட்ட தேதி போன்றவற்றின் அடிப்படையில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தை மிக எளிதாக, சில நொடிகளில் தேடி விடலாம் என்பதோடு, அதை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யமுடியும்.  முன்பெல்லாம் தேசிய நூலக வாரியத்திற்குச் சென்று அங்குள்ள கணினிகள் மூலமாகவே செய்ய முடியும்.

மாபெரும் மின்மரபுடைமைத்​ திட்டத்தின் ​தொடக்கவிழா இந்தச் சனிக்கிழமை 22ஆம் ​தேதி, தேசிய நூலக வாரியத்தின் டிராமா செண்ட்டரி​ல் நடைபெறவுள்ளது. இந்த மடல் தொடரின் இறுதி மடல் வரும் வெள்ளிக் கிழமை தங்களை வந்தடையும்.

அன்புடன்,
தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு
(http://tdh2015.sg/)

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys