ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இந்தத் திட்டம் எதைப் பற்றியது?

கடந்த 1965 முதல் 2015ஆம் ஆண்டு வரை வெளிவந்த/ வெளிவரும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் மின்வடிவமாக்கி, அதனைச் சிங்கப்பூர் இந்திய சமுதாயத்தின் அன்பளிப்பாக நம் நாடு சுதந்திரம் பெற்ற 50வது ஆண்டுவிழாவையொட்டி வழங்குவது தமிழ் மின்மரபுடைமைத்(த.மி.ம) திட்டத்தின் நோக்கம்.

மேலும் மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களை மூல நூல்களோடு மெய்ப்புப் பார்த்தலும் (ஒத்துப் பார்த்தலும்), நூல்களுக்கான குறிப்புரைகள் எழுதுவதும் த.மி.ம திட்டத்தில் அடங்கும்.

2. மின்வடிவமாக்குதல் (digitisation) என்றால் என்ன?

நூலின் உள்ளடக்கத்தை மின்வடிவமாக்கி, அதனைத் தேடு பொறிகள் மூலம் தேடி எடுக்கக் கூடியதாகவும், தரவிறக்கம் செய்யக் கூடியதாகவும், வேண்டிய பகுதிகளை வெட்டி ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆக்குவதே மின்வடிவமாக்குதல். வாசிப்புக்கோ ஆய்வு செய்வதற்கோ உள்ளடக்கத்தையும் பத்திகளையும் தேடி எடுப்பதை மின் தொகுப்பு மிக மிக எளிதாக்கும்

3. குறிப்புரை (Annotation) என்றால் என்ன?
த.மி.ம திட்டத்தைப் பொறுத்தவரை குறிப்புரை என்பது மின்வடிவமாக்கப்பட்ட புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிறு குறிப்புகளாகும். இது குறுகிய நேரத்தில் பல புத்தகங்களை ஆய்வு செய்யும் பணியை எளிதாக்கும்.
4. மெய்ப்புப் பார்த்தலில் நூலில் உள்ள பிழைகளைத் திருத்துவதும் அடங்குமா?
இல்லை. மூல நூலின் உள்ளடக்கம் அப்படியே மின்வடிவமாக்கப்படும். அசலும் நகலும் ஒரே மாதிரி இருப்பது மிக முக்கியம். இருப்பினும் மின்வடிவமாக்கப்படும் போது ஏற்படக்கூடிய பிழைகளைத் திருத்துவது மெய்ப்புப் பார்த்தலில் அடங்கும்.
5. மின்வடிவத் தொகுப்பு எங்கே இருக்கும்? அதை எப்படிப் பார்க்கலாம்?
வரும் 2015ஆம் ஆண்டு முதல், தேசிய நூலக வாரியம் (தே.நூ.வா) மின்தொகுப்பைப் பராமரித்து வரும். வாரியத்தின் இணையத் தளத்தில் பொது மக்கள் இலவசமாக இதனைப் பார்வையிடலாம். எவரும் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இந்தத் தொகுப்பைப் பார்க்க முடியும்.
6. எத்தகைய நூல்கள் மின்வடிவமாக்கப்படும்?
மின்வடிவமாக்கப்படும் நூல்கள் ஏழு விதிமுறைகளின்கீழ் தேர்வு செய்யப்படும்.:
  • அவை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  • அவை, கவிதை, சிறுகதைகள், நாவல், தமிழ் இலக்கியக் கட்டுரை போன்ற இலக்கியப் படைப்புகளாக இருக்க வேண்டும்.
  • சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  • மற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்டதாக இருந்தால்,அவற்றில் ஒரு சிறு பகுதியேனும் சிங்கப்பூரைப் பற்றியதாக இருக்க வேண்டும்.
  • அவை சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 1965ஆம் ஆண்டுக்கும் 50வது சுதந்திர ஆண்டான 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
  • அவை தேசிய நூலக வாரியத்தின் தொகுப்பில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பதிப்புரிமை பெற்றிருப்போர் அவற்றை மின்வடிவமாக்க அனுமதி தந்திருக்க வேண்டும்.
7. நூல்களை மின்வடிவமாக்க இந்த விதிமுறைகள் தவிர, வேறு தகுதி விதிமுறை உண்டா?
இல்லை. தேசிய நூலக வாரியத்தின் தொகுப்பிலுள்ள அனைத்து நூல்களும் மின்வடிவமாக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்தவையே.
8. இந்தத் திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் யார்?

சிங்கப்பூரில் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கும் அதைப் போற்றிப் பாதுகாப்பதற்கும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தனிப்பட்ட சிலரின் முயற்சியில் உருவானது இந்தத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அவர்கள் தங்களைத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டக்குழுவினர் என அழைத்துக்கொள்கின்றனர்.

த.மி.ம குழுவோடு தேசிய நூலக வாரியமும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. மேலும் தேசிய மரபுடைமைக் கழகம், தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம் ஆகியவையும் இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றன.

தங்கள் நூல்களை மின்வடிவமாக்க ஒப்புதல் தரும் தமிழ் எழுத்தாளர்களின் ஆதரவும் இந்திய சமூகத்தின் ஆதரவும் இன்றி இத்திட்டம் சாத்தியமாகாது.

9. இத்திட்டத்திற்கு நிதி உதவியளிப்பவர் யார்?
நூல்களை மின்வடிவமாக்குவதற்கான செலவைத் தேசிய நூலக வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனைய செலவுகளுக்கு இந்திய சமூகத்திடமிருந்தும் அரசு சார்ந்த நிறுவனங்களிடமிருந்தும் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும்.
10. 1965ஆம் ஆண்டுக்கு முன்னரும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரும் வெளியிடப்பட்ட நூல்களும் மின்தொகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுமா?
மின்தொகுப்பின் முதல் கட்டப் பணி நிறைவேறியதும், 1965க்கு முன்னர் வெளிவந்த புத்தங்கள் கருத்தில்கொள்ளப்படும். அதேபோல், 2015க்குப் பின்னர் வெளிவரும் புத்தகங்களும் அடுத்த கட்டத் தொகுப்பில் சேர்க்கப்படலாம்.
11. இலக்கியப் பிரிவைச் சேராத தமிழ்ப் புத்தகங்களும் கருத்தில் கொள்ளப்படுமா?
அத்தகைய நூல்களை மின்தொகுப்பில் சேர்க்க வேண்டிய தேவை இருக்குமென்றால், பின்னர் அவற்றைச் சேர்ப்பது குறித்துக் கருத்தில்கொள்ளப்படும்.
12. தற்போது தேசிய நூலக வாரியத்தின் தொகுப்பில் இடம்பெறாத நூல்களின் நிலை என்ன?
தேசிய நூலக வாரியத்தின் தொகுப்பில் விடுபட்டுப் போன தமிழ்ப் படைப்பிலக்கிய நூல்களைத் தேடிப் பெற்று, அவற்றை நூலக வாரியத்தின் தொகுப்பில் சேர்க்கத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டக்குழுவினர் எண்ணியுள்ளனர். அத்துடன் கையெழுத்துப் பிரதிகளையும் சேமித்து வைக்கும் திட்டமும் உள்ளது. நூலக வாரியம் மூலம் அவற்றைப் பொது மக்கள் பார்வையிடலாம்.
Record(s) 1 - 12 of 16  1 2 Next 
முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys