ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
உரைகள்

உரைகள்

சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது நமது 50 ஆண்டுக்காலத் தமிழ் இலக்கியத்தை மின்மயமாக்கி நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்வு தங்களுக்கு நினைவிருக்கும். அத்திட்டத்தின்வழித் தமிழ் மின்மரபுடைமைக் குழு 350 நூல்களை மின்மயமாக்கியது. அடுத்தகட்ட முயற்சியாக இக்குழு இதுவரை மேற்கொள்ளப்படாத மற்றுமொரு புதிய திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.


நம் நாடு, சர் ​ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூர்த் தீவை விலைக்கு வாங்கி, ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியை ஏற்படுத்திய 200ஆம் ஆண்டு நிறைவை 2019இல் கொண்டாடவிருக்கிறது. அதே ஆண்டில், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் 200 ஆண்டுக்கால வரலாற்றைக் கூறும் நூல் ஒன்றைத் தமிழ் மின்மரபுடைமைக் குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

 
பிப்ரவரி திங்கள்  6 தேதி (இன்று) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இந்நாளன்று ராஃபிள்ஸ் 197 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அதன் 200ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்தில், இன்னும் ​​மூன்று ஆண்டுகளில், மேற்குறிப்பிட்ட சிங்கப்பூர்த் தமிழர்கள் குறித்த வரலாற்று நூல்​ வெளியிடப்படவுள்ளது. அந்நூல் சிங்கப்பூர்த் தமிழர்கள் குறித்த வரலாறு, பொருளியல், ச​மூகம், கல்வி, கலாசாரம் போன்ற கூறுகளில் கவனம் செலுத்தும்.
தமிழ் மின்மர​புடைமைக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ள திட்டப் பொறுப்பாளரான திரு அருண் மகிழ்நன், “இந்த நூல் சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் பொது மக்களுக்கு எடுத்துக்கூறு​ம்  வகையில் அமைய வேண்டும் என்று நாங்கள்  விரும்புகிறோம்,” என்றார். அதே நேரத்தில், இந்நூல் சாதாரண​ வாசகர்களும் படித்துப் பயன்பெறும் அளவுக்கு எளிய நடையில் எழுதப்படும் என்றும் அவர் கூறினார்.
 
முன்னணித் தமிழ்க் கல்வியாளரும் நூல் திட்டக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் சுப தி​ண்ணப்பன், “ஆசிரியர்களும் மாணவர்களும் பயில்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் அதிகாரபூர்வமான தகவல்களைத் தரும் ஒரு சிறந்த வளமாக அந்த நூலை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கம்,” என்றார். தமிழ்ச் சமூகத்தின் சில அம்சங்கள் குறித்து ஏற்கெனவே சில நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தாலும் இது போன்ற விரிவான ஆவண நூல் இதுவரை இல்லை என்றும் அவர் சொன்னார்.
 
ஓர் இனத்தின் வேர்களைத் தேடி அறிந்துகொள்வதற்கு வரலாற்றுத் தகவல்கள் பயன்படுகின்றன. சிங்கப்பூரின் கடந்த 200 ஆண்டுக்கால வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு என்ன என்பதை நம் மாணவர்களும் பெரியவர்களும் அறிந்துவைத்திருப்பது அவசியம். அதோடு, தேசியக் கல்விச் செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் இந்த ஆவண நூல் பெரிதும் உதவும். குறிப்பாக, தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்குப் பெருமளவில் பயன்படக்கூடிய வளமாக இந்நூல் விளங்கும்.
கூடுதல் தகவல்கள் பெறக் கீழ்க்காணும் இணையத் தொடர்பைக் கிளிக் செய்யவும்:
http://seithi.mediacorp.sg/mobilet/singapore/06-feb-history-of-s-pore/2491054.html
முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys